கான்காஹ் அஸ்ராரியாவும் அது நிறுவப்பட்டதன்
லட்சியமும் நோக்கமும்
கான்காஹ் என்பதன் உண்மையான அர்த்தம் ‘வணக்கஸ்தலம்’ ஆகும். அங்கு அல்லாஹ்வை நினைத்து தியானம் புரிதல், அவனைப் புகழ்தல் எனும் தஸ்பீஹ் செய்தல், சதா இறைவனின் பக்கம் நோட்டமிடுதல் (முராகபா) எனும் “ஆழ்நிலை தியானம்” புரிதல் இரவு நேரங்களில் குறைவாக உறங்குபவர்கள், ஸஹர் எனும் இரவின் மூன்றாம் பகுதியில் விழித்திருந்து நம்முடைய நேசனாம் அல்லாஹ் (ஜல்) விடம் பாவமன்னிப்பு கோருபவர்கள் தங்கியிருத்தல் ஆகிய நற்செயல்கள் புரியப்படுகின்றன. மேலும் இத்தகைய தன்மைகளை அடைந்துகொள்வதற்கும் இத்தகைய சிறப்புகளை மனிதர்களில் ஏற்படுத்துவதற்கும் கல்வியும் பயிற்சியும் இந்த கான்காஹ் வில் அளிக்கப்படுகிறது.
இங்குகூறப்பட்ட பொருளின்படியும் நோக்கத்தின் படியும் கான்காஹ்வின் வரலாறு ஆதி பிதா ஹஜ்ரத் ஸைய்யதினா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்தே ஆரம்பமாகிறது. ஆதம் (அலை) அவர்கள் இப்பூமியில் ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு இறைவனை வணங்குதற்கென்றே கட்டிடம் கட்டி, அங்கு இறைவனின் தியானம், இறைவனை புகழ்தல் மற்றும் இறைவனை வணங்குதல் யாவையும் புரிந்து வந்தார்கள். நமது நாயகம் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலும் இறை தியானத்தில் மூழ்கி இருப்பவர்களும் அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுபர்களாகிய அஸ்ஹாபுகளுக்காக ஒரு குறிப்பிட்ட இடம் இருந்தது. அதை ‘ஸூஃபா’ என்பர். இதைப் பற்றி ஹஜ்ரத் ஷைக் அலி ஹுஜ்வைரி (ரஹ்) அவர்கள் தன்னுடைய ‘கஷ்ஃபுல் மஹ்ஜுப் ’ எனும் நூலில் எழுதியிருப்பதாவது : “ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய விசேஷமான தோழர்கள் ‘அஸ்ஹாபெஸூஃப்பா’ என்பவர்கள் எப்பொழுதும் மஸ்ஜிதுன் நபவியின் ஒரு புறத்தில் தங்கியிருப்பார்கள். அவ்விடத்தை ‘ஸூஃபா’ என்பர். அவ்விடத்தில் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் யாவரும் இதயத்திலிருந்து இவ்வுலகின் சிந்தனையை அறவே நீக்கிவிட்டு, லோகாதய காரியங்களிலிருந்து விடுபட்டு சதா இறைவனை வணங்குவதிலேயே ஈடுபட்டிருப்பார்கள். இக்கருத்தில் முஸ்லிம் உம்மத்தார் யாவரும் ஏகோபித்துள்ளார்கள்.
சரித்திரத்தின் (வரலாற்றின்) மூலமாக தெரிவது யாதெனில் உம்மத்தார்களில் குறிப்பானவர்களும் பக்குவப்பட்டவர்களும் ஆகிய ஸாலிஹீன்களும் இறைநேசர்களும், இறைவனைப் புகழ்வதற்கும், அவனுடைய நினைவில் மனமொன்றி லயித்திருப்பதற்கென்றே ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றிருந்தனர். திருக்குர்ஆனிலும் அல்லாஹ்வின் பக்கம் முழுமையான தன்னுடைய கவனத்தைத் திருப்பியிருக்கவேண்டும் எனும் கருத்தில் ஆயத்து வந்துள்ளது.
சூரா : முஜம்மில் (அல்குர்ஆன்) 73:8 “எனினும் (இரவிலும், பகலிலும்,) உம்முடைய இறைவனின்
பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே
முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக”
திருக்குர்ஆனின் ஸூரயெ ‘நூர்’ எனும் அத்தியாயத்தில் “புயூத்” எனும் சொல் பள்ளிவாயில் (மஸ்ஜித்), கல்விக்கூடம் (மதரஸா), கான்காஹ் என்பனவற்றையெல்லாம் குறிக்கும் ஒரு பொது சொல்லாகும். ஆக நாம் கான்காஹ்களையும் மதித்து கண்ணியப்படுத்தவேண்டும். மேலும் திருக்குர்ஆனின் ஸீரயெ ஹஜ் எனும் அத்தியாயத்தில்,
சூரா : ஹஜ் (அல்குர்ஆன்) 22:40
எனும் சொற்கள் வந்துள்ளன. அதன் பொருளாவது ஆத்மீகப் பயிற்சியளிக்கப்டும் கேந்திரம் மற்றம் தர்வேஷ் எனும் ஃபகீர்களுடைய கான்காஹ் எனப்படும்.
மேற்கூறியவற்றின் அடிப்படையிலேயே நமது இமாம் ஹஜ்ரத் வாலா முர்ஷிதினா வமௌலானா அஸ்ராருல் ஹக்கான் ஸாஹிப் (ரஹ்) அவர்களும் அவரது முதவஸ்ஸிலீன் எனப்படும் முரீது (சீடர்)களும், இறைவனின் நினைவிலும், அவனைப் புகழ்வதிலும் அவனது விருப்பம் மற்றும் நேசத்திலும் அன்பிலும் மூழ்கி சதா அவனையே நோட்டமிடுவதற்கு அதாவது “முராகபா ” செய்வதைக் கொண்டு கிடைக்கும் நற்பாக்கியங்களையும் நற்பலன்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் ஆங்காங்கு ஆத்மீக கல்வியும் பயிற்சியும் அளிக்கும் பல கேந்திரங்களை நிர்மாணித்துள்ளார்கள். இவைகள் “கான்காஹ் அஸ்ராரியா” என்று அழைக்கப்படுகின்றன. அங்கெல்லாம் இறைவழிபாடு, மற்றும் நமது முர்ஷித் அவர்கள் கற்றுக் கொடுத்த (காண்பித்த) முறையில் இறைதியானம், மனதையும் எண்ணத்தையும் ஒருமுகப்படுத்தி சிதறாத சிந்தனையுடன் இறைத் தியானத்திலும், அவனை நேசிப்பதிலும் அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இறையன்பர்கள் யாவரும் ஒன்று கூடுகின்றனர். இக்கேந்திரங்கள் அதாவது கான்காஹ்களில் மேற்கூறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்கும் அவைகளில் மேம்பாடு அடைவதற்குமான பயிற்சியில் முழுகவனம் செலுத்தப்படுகிறது. ஆத்மீகக் கல்வியையும் பயிற்சியையும் அல்ஹாஜ் ஹஜ்ரத் ஷாஹ் இஹ்ஸானுல் ஹக் கான் சாஹிப் மத்த ஜில்லஹு அவர்கள் தனது சாதகர்களுக்கு அளிப்பதுடன் அவர்களுடைய வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் எல்லாவித கண்காணிப்பும் விசேஷ கவனமும் செலுத்தி வருகிறார்கள்.
இறைவனின் நினைவு, அவன் பேரில் அன்பு ,அவனை அடைந்து கொள்வதில் விசேஷமான ஆர்வம் இவையாவும் உள்ள மனித வர்க்கத்தினர் யாவருக்கும் நமது கல்வியும் பயிற்சியும் பொதுவானதும் மேலானதும் அவசியமானதும் ஆகும். நம்முடன் சிரமமின்றி தொடர்புகொள்வதற்கான கீழ்க்கண்ட கான்காஹ்களின் முகவரி கொடுக்கபட்டுள்ளன.
ADDRESSES | |
Hazrath Sha Ehsanul Huq Khan Saheb, Khankha Asraria, Mangrawan Sherif, Azamgarh District. UP. Pin: 276 205. |
Khankha Asraria, Zakir Nagar, Kabali Road, Jamshedpur - 831 001 Jarkhand. Tel: 0657 - 2463864 |
Khankha Asraria, Near Jamia Masjid, Asif Ganj. Azamgarh. UP. Pin: 276 001. Tel: 05462 - 220126 |
Khankha Asraria, Malkapur. Buldana District. Maharashtra. Pin: 443 101. Tel: 07267 - 25273 |
Khankha Asraria, Siraj Manzil, 44, Morland Road, Mumbai - 400 008. Tel: 022 - 23093800 |
Khankha Asraria, Mohalla Banuliya, Bihar Sharif. Pin: 803 101. Bihar |
Khankha Asraria, Street # 22, House No. 370, Zakir Nagar (Okala) New Delhi - 110 025. Tel: 011 - 26988501 |
Khankha Asraria, Haji Baikan Street, Moghul Pura Muradabad - 244 001. UP Tel: 0591 - 2312636 |
Khankha Asraria, 19, Temple Street, kolkotta - 700 072. Tel: 033 - 22369889 |
Khankha Asraria, Hamdu Nagar - B Near Mosque, Nabi Karim Aligarh - 202 001. |
Khankha Asraria, Right Ghat Kalu, Near Puvva Masjid, Old Fort, Bhopal. MP. Tel: 0755 - 2739739 |
Khankha Asraria, கான்காஹ் அஸ்ராரியா, |
Khankha Asraria, Tippu Nagar, Mysore Road Bangalore. |
Hazrath Sha Ehsanul Huq Khan Saheb Building Howriya, #4, 1st Floor, Jamayza District Mecca Mukarrama. Saudi Arabia. Tel: 00966 - 2 - 5760491. |
Khankha Asraria, Door No. 17-3-371/14 Urdu Public School, Eplipan, Yakudpura, Hyderabad - 500 023. |
Khankha Syediya Survey No. 56/2, Kusumba Road Near Daiyana Nagar Malegoan. Nasik District. Maharashtra. Pin: 423 203. Tel: 0255 - 2436181 |
© Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.